தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியானா மாஜி முதல்வர் வழக்கில் ரூ.300 கோடி நிலம் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா தொடர்புடைய வழக்கில் ₹300 கோடி மதிப்புள்ள நிலத்தைபறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது முதல்வராக இருந்தவர் பூபிந்தர்சிங் ஹூடா. தற்போது அரியானா எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். அரியானாவில் எம்3எம் ரியல் எஸ்டேட் குழு சார்பில் நடந்த நில மோசடி ெதாடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
Advertisement

இந்த மோசடியில் பூபிந்தர்சிங் ஹூடாவுக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் எம்3எம் குழுமத்திற்கு சொந்தமாக குருகிராமில் உள்ள ₹300 கோடி மதிப்புள்ள நிலத்தை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் இந்த நிலத்தை இணைக்க அமலாக்கத்துறை சார்பில் தற்காலிக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டெல்லியை ஒட்டி அமைந்துள்ள குருகிராம் மாவட்டத்தில் உள்ள ஹர்சரு தெஹ்சில் பஷாரியா கிராமத்தில் இந்த நிலம் அமைந்துள்ளது. அமலாக்கத்துறை ெமாத்தம் 88.29 ஏக்கர் நிலத்தை இந்த உத்தரவு மூலம் பறிமுதல் செய்துள்ளது.

 

Advertisement