தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ராஜ்யசபா எம்பியாக பதவியேற்பு; காந்தி, அம்பேத்கர், பெரியார் வழியில் செல்வேன்: கமல்ஹாசன் அறிக்கை

சென்னை: கமல்ஹாசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜ்யசபா உறுப்பினராக உறுதிமொழி ஏற்றபோது, பணிவுடனும், மனசாட்சி நிறைந்த இதயத்துடனும் அதை செய்தேன். கவிஞர்கள், புரட்சியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் சீர்திருத்தவாதிகள், நீதி, கண்ணியம் மற்றும் சுயமரியாதையில் ஆழமாக நம்பிக்கை கொண்ட குடிமக்களை உருவாக்கிய தமிழ்நாட்டுடன் இதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

காந்தியின் கனவுகள், அம்பேத்கரின் அறிவுத்திறன் மற்றும் பெரியாரின் நம்பிக்கை ஆகியவற்றை முன்னெடுத்து செல்கிறேன். நாடாளுமன்றத்திற்கு நான் வெறும் விமர்சகராக மட்டும் வரவில்லை, மாறாக எதிர்க்க வேண்டிய இடத்தில், பகுத்தறிவுடன் செயல்படுவேன், ஆதரிக்க வேண்டிய இடத்தில் உறுதியுடன் செய்வேன், ஆலோசனை வழங்க வேண்டிய இடத்தில் ஆக்கப்பூர்வ யோசனையை வழங்குவேன். காந்தியின் அகிம்சை, அம்பேத்கரின் அரசியலமைப்புவாதம், நேருவின் பன்மைத்துவம், வல்லபாய் பட்டேலின் நடைமுறைவாதம் மற்றும் பெரியாரின் பகுத்தறிவு அனைத்தும் ஒருசேர நமது நாட்டை பிரிவினைவாதத்தின் ஆபத்துகளிலிருந்து மீட்க வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.