தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெறிநாய்கடி விவகாரத்தில் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தகவல்

Advertisement

புதுடெல்லி: வெறிநாய் கடியால் டெல்லியில் 6 வயது சிறுமி ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக பத்திரிகையில் வெளியான கட்டுரையின் அடிப்படையில், வெறிநாய்க்கடி குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது, வெறிநாய்கடியால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள், ‘‘வெறிநாய் கடி சம்பவங்களால் முதியவர்களும், குழந்தைகளும் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பத்திரிக்கை ஒன்றில் பார்த்தோம். அது மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

குறிப்பாக நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான நாய் கடி சம்பவங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. அவற்றில் பல ரேபிஸ் தொற்றுக்கு வழிவகுத்துள்ளது. இறுதியில், இந்த கொடிய நோய்க்கு பலியாவது குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் தான் என்பது தற்போது தெளிவாக தெரியவந்துள்ளது. எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு தற்போது நாங்களாக இந்த விவகாரத்தில் முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளோம். மேலும் தொடரப்பட்ட இந்த வழக்கை ரிட் மனுவாக கருத்தில் கொண்டு உரிய தேவையான வழிகாட்டுதல்கள் விரைவில் பிறப்பிக்கப்படும் ’’ என்று உத்தரவிட்டனர்.

Advertisement

Related News