தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிகரிக்கும் யானைகள் அட்டகாசம்: தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Advertisement

குடகு: மடிக்கேரி தாலுகாவில் அதிகரித்து வரும் யானைகளின் தொல்லையை தடுக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடகு மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. காபி தோட்டங்கள், வயல்களில் முகாமிட்டுள்ள யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அதேபோல், மடிக்கேரி தாலுகாவின் செம்பு கிராமத்தை சுற்றிலும் உள்ள கிராமங்களில் யானைகள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அவற்றை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது,

‘செம்பு கிராமத்தை சுற்றிலும் உள்ள ஊருபையலு, தப்பட்கா, ஆனேஹள்ளா, காந்துபையலு பகுதிகளில் கடந்த பல நாட்களாக யானைகள் வயல்களில் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகள் யானைகளால் பயிர் சேதமடைந்து வருகிறது. இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். பள்ளி மாணவர்கள் செல்லும் வழியில் யானைகள் நிற்பதை காணமுடிகிறது. இதனால், அசம்பாவிதம் ஏற்படும் முன்னரே உரிய நடவடிக்கை எடுத்து யானைகளை விரட்டுவது மட்டுமின்றி யானைகள் நிரந்தரமாக வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுகக வேண்டும் என்ற அவர்கள், காட்டு யானைகளால் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என கிராம மக்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement