தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவை நிர்வகிக்கும் பிரசார் பாரதி நிறுவன தலைவர் திடீர் ராஜினாமா

புதுடெல்லி: தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவை நிர்வகிக்கும் பிரசார் பாரதி நிறுவன தலைவர் திடீரென ராஜினாமா செய்து உள்ளார். தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றை நிர்வகிக்கும் இந்தியாவின் பொதுத்துறை ஒலிபரப்பு நிறுவனமான ‘பிரசார் பாரதி’ தலைவர் நவ்னீத் குமார் செகல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் ஏற்று கொண்டுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்தவரான இவர், கடந்தாண்டு மார்ச் 16ம் தேதி பிரசார் பாரதியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு 3 ஆண்டுகள் பதவி காலம் இருக்கும் நிலையில் திடீரென அவர் ராஜினாமா செய்தி ருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், அரசு பணியில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். பிரசார் பாரதி தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், உத்தரபிரதேச அரசின் கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றியவர்.

Advertisement

உ.பி.யில் ஆக்ரா-லக்னோ விரைவு சாலை உட்பட பல பெரிய உள்கட்டமைப்பு மற்றும் கொள்கை திட்டங்களுக்கு தலைமை தாங்கியவர். அவரது திடீர் பதவி விலகலுக்கான காரணம் தெரியவில்லை. நவ்னீத் குமார் செகல் ராஜினாமாவை தொடர்ந்து, பிரசார் பாரதியின் புதிய தலைவர் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. இருப்பினும், பிரசார் பாரதி சட்டம், 1990ன் படி, தலைவர் பதவியும் மற்றும் பிற உறுப்பினர்களின் பதவிகளும் காலியாக இருக்கும்போது, பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி தற்போதைய செயல்பாடுகளை கவனித்துக்கொள்வார். தற்போது, கௌரவ் திவேதி தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். எனவே, புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை அவர் நிர்வாக பணிகளைக் கவனித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News