தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மச்சிலிப்பட்டினத்தில் ஹரிஹர வீர மல்லு படத்தின் பிரீமியம் ஷோவில் பவன் கல்யாண் ரசிகர்கள் மோதல்

*தியேட்டர் கண்ணாடி உடைப்பு

*போலீசார் தடியடி

திருமலை :ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில் உலகம் முழுவதும் நேற்று வெளியான படம் ஹரிஹர வீர மல்லு. இப்படத்தின் ரசிகர்களுக்கான பிரீமியம் ஷோ அதிகாலையில் காட்சிபடுத்தப்பட்டது. அவ்வாறு ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினத்தில் உள்ள தனியார் தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்ட ரசிகர்களுக்கான பிரீமியம் ஷோவைக்கான பவன் கல்யாண் ரசிகர்கள் அதிகளவில் திரண்டனர்.

இதனால் அங்கு தள்ளுமள்ளு ஏற்பட்ட நிலையில் தகராறாக மாறி ரசிகர்கள் தியேட்டருக்குள் புகுந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் தியேட்டர் நுழைவு வாயில் கண்ணாடி உடைக்கப்பட்டது.

பிரீமியம் ஷோவுக்கு வரம்பைத் தாண்டி ரசிகர்கள் அதிக அளவில் வந்ததால், போலீசார் மற்றும் திரையரங்க நிர்வாகத்தாலும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பவன் கல்யாண் ஆந்திர மாநில துணை முதல்வராக பதவியேற்று முதல்முறையாகவும், பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்புடன் வெளியாகியது. இவை ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.