தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆபரேஷன் சிந்தூர் ஒன்றிய அரசின் தோல்வியின் சின்னம்: அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் நேற்று நடந்த சிறப்பு விவாதத்தில் உத்தரபிரதேச சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் உளவுத்துறையும், ஒன்றிய அரசும் தோல்வி அடைந்து விட்டதற்கான சின்னம். உளவுத்துறை தோல்விக்கு யார் பொறுப்பேற்பார்கள்? இந்த கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளிக்கும் என நம்புகிறேன். முக்கிய பிரச்னைகளில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எந்த உலக நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை. இது இந்தியாவின் வௌிநாட்டு ராஜதந்திரத்துக்கு ஒரு இருண்ட கட்டம். நம் அண்டை நாடுகள் நம்மை தாக்குகின்றன அல்லது ஆக்கிரமிக்கின்றன. இந்தியா பாகிஸ்தான் போரை இந்தியா திடீரென் முடிவுக்கு கொண்டு வந்தது. யாருடைய அழுத்தம் காரணமாக ஒன்றிய அரசு அவ்வாறு செய்தது?” என்று பேசினார்.
Advertisement

Advertisement