தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நேத்ராவதி ஆற்றங்கரையில் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை தோண்டும் பணி தொடக்கம்: 2 மூத்த மருத்துவர்கள் முன்னிலையில் நடந்தது

பெங்களூரு: தர்மஸ்தலாவில் கடந்த திங்கட்கிழமை புகார்தாரர் அடையாளம் காட்டியதன் அடிப்படையில் சடலங்கள் புதைக்கப்பட்டதாகக் குறிக்கப்பட்ட இடங்களை தோண்டும் பணியை எஸ்.ஐ.டி நேற்று தொடங்கியது. தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக முன்னாள் தூய்மைப் பணியாளர் கொடுத்த புகாரின் பேரில், மாநிலத்தையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய இந்த வழக்கை விசாரிக்க மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் கொடுத்தவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
Advertisement

பின்னர் புகார்தாரரை அழைத்துக்கொண்டு சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் காட்டச்சொல்லி அந்த இடங்களில் அடையாள குறியிடப்பட்டன. இதையடுத்து, நேற்று அந்த இடங்களை தோண்டும் பணி தொடங்கியது. புகார்தாரர் அடையாளம் காட்டிய, நேத்ராவதி ஆற்றங்கரையோர காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட சடலங்களை, மருத்துவர்கள் குழுவுடன் தோண்டி எடுக்கும் பணியை எஸ்.ஐ.டி தொடங்கியது. மங்களூரு கேஎம்சி மருத்துவமனையின் 2 அனுபவம் வாய்ந்த மூத்த மருத்துவர்களான ஜெகதீஷ் ராவ் மற்றும் ரஷ்மி ஆகிய இருவரும் எஸ்.ஐ.டி அதிகாரிகளுடன் அனுப்பிவைக்கப்பட்டனர். உதவி ஆணையரின் மேற்பார்வையின் கீழ் 12 தொழிலாளர்கள் சடலங்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Related News