தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதம் நீட்டிப்பு

புதுடெல்லி: மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம், மெய்டீ மற்றும் குக்கி சமூகத்தினரிடையே இனக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 260 பேர் கொல்லப்பட்டனர். முதல்வர், அமைச்சர், அரசு அதிகாரிகளின் வீடு உட்பட பல வீடுகள்,வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையை கட்டுப்படுத்த மாநில அரசு தவறியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில்,முதல்வராக இருந்த பிரேன் சிங் கடந்த பிப்ரவரியில் பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் அமலில் உள்ள ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்து உள்ளார். இந்த உத்தரவு வரும் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் அமலுக்கு வரும்.