ஐடி நிறுவனங்களில் 12 மணி நேர வேலை திட்டம் வாபஸ்: கர்நாடகா அரசு உத்தரவு
Advertisement
பல்வேறு தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. தொழிற்சங்கங்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இதுதொடர்பாக கர்நாடக தொழிலாளர் நலத்துறையின் கூடுதல் ஆணையர் ஜி.மஞ்சுநாத், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் 12 மணி நேர வேலை திட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜி.மஞ்சுநாத் அறிவித்தார். இதற்கு தொழிலாளர் நலத்துறை மற்றும் கர்நாடக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். அதுபோல் கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட்டும், 12 மணி நேர வேலை திட்டத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளார். இது தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று கே.ஐ.டி.யு. தெரிவித்துள்ளது.
Advertisement