தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றம் சார்பில் புதிய விசாரணைக் குழு: சபாநாயகர் ஓம்பிர்லா திட்டம்

புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பண மூட்டைகள் சிக்கின. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்து அவரை பதவி நீக்கம் செய்ய ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. நீதிபதி வர்மாவை பதவி நீக்க கடந்த 21ம்தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் 152 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டது.
Advertisement

அதே போல் மாநிலங்களவை எம்பிக்களும் அப்போதைய மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரிடம் கொடுத்தனர். இதையடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கும்படி தன்கர் உத்தரவிட்டார். அன்று இரவே அவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த பரபரப்பான சூழலில் யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு புகழ்பெற்ற சட்ட நிபுணர் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கான ஆலோசனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மக்களவை தலைவர் கடிதம் எழுதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement