தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியா புதிதாக உருவாக்கிய பிராலே ஏவுகணை வெற்றிகரமாக சோதனை: டிஆர்டிஓ தகவல்

பாலசோர்: இந்தியா புதிதாக உருவாக்கிய பிராலே ஏவுகணை 2 முறை ஏவப்பட்டு, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராலே என்பது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட திட எரிபொருள் பகுதியளவு உந்து விசைத்திறன் கொண்ட ஏவுகணையாகும். பிராலே ஏவுகணை பல்வேறு இலக்குகளுக்கு பலவகை ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் செயல்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் பிராலே ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
Advertisement

பிராலே ஏவுகணை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பால் போர்க்கால பயன்பாட்டுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது 150 முதல் 500 கிமீ தூரம் வரை சென்று எதிரி இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இது 350 முதல் 700 கிலோ எடை உடையது. இந்த பிராலே ஏவுகணை கடந்த திங்கள்(ஜூலை 28) மற்றும் நேற்று ஆகிய இருதினங்களில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து இரண்டு முறை விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை சோதனையை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் மூத்த விஞ்ஞானிகள், இந்திய விமானப்படை உயரதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Advertisement

Related News