தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊர்க்காவல் படை ஆள்சேர்ப்பு முகாமில் மயங்கியவர் பீகாரில் ஆம்புலன்சில் பெண் கூட்டு பலாத்காரம்: 2 பேர் கைது

 

Advertisement

கயா: பீகாரில் அரசு ஆள் சேர்ப்பு முகாமில் மயங்கி விழுந்த பெண், ஆம்புலன்சில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அவலம் அரங்கேறி உள்ளது. பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் கடந்த ஜூலை 24ம் தேதி ஊர்க்காவல் படைக்கான ஆள்சேர்ப்பு முகாமில் உடல் தகுதி தேர்வு நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த 29 வயது பெண் ஒருவர் முகாமில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் கயாவில் உள்ள அனுக்ரா நரேன் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார்.

மயக்கத்தில் இருந்தபோது ஆம்புலன்சுக்குள் பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறை புகாரின்படி, உடல் பரிசோதனையின் போது தான் சுயநினைவை இழந்ததாகவும், போக்குவரத்தின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து ஓரளவு மட்டுமே அறிந்திருந்ததாகவும் அந்தப் பெண் கூறினார்.  பின்னர், ஆம்புலன்சில் இருந்த மூன்று முதல் நான்கு ஆண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் காவல்துறைக்கும் மருத்துவமனை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.

அவரது அறிக்கையைத் தொடர்ந்து, புத் கயா காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கயா மாவட்ட எஸ்பி ராமானந்த் குமார் கவுஷல் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம்.” என தெரிவித்தார்.

* பேய்கள் ஆட்சி நடக்கிறது: தேஜஸ்வி கண்டனம்

இதுகுறித்து பீகார் பேரவை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தன் எக்ஸ் பதிவில், ‘நிதிஷ் அரசை அகற்று, பெண் குழந்தையை காப்பாற்று’ என்ற ஹேஷ்டேகுடன், “பீகாரில் பேய்களின் ஆட்சி நடக்கிறது. பெண் குழந்தைகளை காக்க தவறிய நிதிஷ் அரசை அகற்றுங்கள். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து முதல்வர் நிதிஷ் குமாரும், அவரது இரண்டு சகாக்களும் மவுனம் கடைப்பிடிப்பது குற்றமாகும்’ என காட்டமாக விமர்சித்துள்ளார்.

Advertisement