தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் கைதான முன்னாள் எம்எல்ஏ ஆதரவாளரிடம் கட்டுக்கட்டாக பணம்: வீடியோ ஆதாரம் சிக்கியது

திருமலை: ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் கைதான முன்னாள் எம்எல்ஏவின் ஆதரவாளரிடம் கட்டுக்கட்டாக பணம் இருக்கும் வீடியோ ஆதாரம் சிக்கியது. ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ.3500 கோடி மதுபான ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதியப்பட்டு, சிறப்பு விசாரணை அதிகாரிகள் பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் ஏற்கனவே ஐதராபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இருந்து 12 அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் கைதான வெங்கடேஷ் நாயுடு என்பவரின் மொபைல் போனில் இருந்து ஒரு முக்கிய ஆதாரம் சிக்கியுள்ளது. அதில், தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக கட்டுக்கட்டான பணத்தை ஒரு ரகசிய இடத்தில் சந்திரகிரி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டியின் நெருங்கிய ஆதரவாளர் வெங்கடேஷ் நாயுடு எண்ணி வைக்கும் வீடியோ இருந்தது. இவ்வழக்கு விசாரணையில் வெங்கடேஷ் நாயுடுவின் வீடியோ ஆதாரங்கள் தற்போது முக்கியமானதாக மாறியுள்ளது. இதன் மூலம், மது மோசடி வழக்கில் செவிரெட்டி கும்பல் கையும் களவுமாக பிடிபட்டதாகத் கூறப்படுகிறது.