தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் பாஜ மாஜி பெண் எம்.பி உட்பட 7 பேரும் விடுதலை: மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற இடத்தில் கடந்த 2008ம் ஆண்டு செப்.29ல் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக பாஜ முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் சமீர் குல்கர்னி, ராஜா ரஹீர்கர்,, சுவாமி அம்ரூதானந்த், சுதாகர் சதூர்வேதி உள்ளிட்ட ஏழு பேர் மீது, சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
Advertisement

இந்த வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இருப்பினும் வழக்கில் தொடர்புடையை பிரக்யா சிங் தாக்கூர் உள்பட, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் அப்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

சுமார் 17 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே.லஹோட்டி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், “இந்த வழக்கில் குற்றம்சடடப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர். குண்டு வெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டியதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. மேலும் காந்த் புரோகித் ஆர்டிஎக்ஸ் கொண்டு வந்ததற்கான ஆதாரமும் கிடையாது. குண்டு இருந்ததாக கூறப்பட்ட மோட்டார் சைக்கிள் சாத்விக்கு சொந்தமானது கிடையாது. அதற்கான ஆதாரமும் இல்லை.

மேலும் அதனை நிரூப்பிக்க அரசு தரப்பு தவறி விட்டது. அதேபோன்று குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களின் மருத்துவ சான்றிதழ்களில் மோசடி நடந்துள்ளது தெரிய வருகிறது. இவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டுதான் தற்போது அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட ஆறு பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்க வேண்டும். தீவிரவாதத்துக்கு மதம் என்பது கிடையாது. எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. ஒருவருக்கு எதிரான யூகங்களின் அடிப்படையில் அவரை குற்றவாளியாக அறிவிக்க முடியாது. அதற்கு வலுவான ஆதாரங்கள் தேவை. இந்த வழக்கில் அத்தகைய ஆதாரங்கள் இல்லாததால் அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர்” என தீர்ப்பு வழங்கினார்.

Advertisement

Related News