தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதலன் வீட்டின் எதிரே தீக்குளித்த பெண் போலீஸ் பலி

Advertisement

திருமலை: வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட காதலன் வீட்டின் எதிரே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் போலீஸ் சிகிச்சை பலனின்றி பலியானார். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புரோதட்டூரில் மாநில அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்கு ேபாலீஸ்காரர் பிரசாந்தி(24) என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவரும், புரோதட்டூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய சித்தூர் மாவட்டம், குப்பம் அடுத்த மார்வாடா கிராமத்தை சேர்ந்த வாசு(26) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த 6 மாதத்திற்கு முன் வாசு, வேலையை விட்டு விட்டு சென்றுவிட்டார். அதற்கு பிறகு பிரசாந்தியிடம் பேசவில்லையாம். இதனால் பிரசாந்தி கடந்த 23ம் தேதி வாசுவை தேடி, அவரது கிராமத்திற்கு சென்றார்.

அப்போது வாசுவுக்கு, வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரசாந்தி, வாசுவிடம், ‘என்னை காதலித்துவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாமா?’ எனக்கேட்டு தகராறு செய்தார். பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வாசுவின் வீட்டிற்கு சென்ற பிரசாந்தி தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். தீ உடல் முழுவதும் பரவி அலறி துடித்த அவரை, பொதுமக்கள் மீட்டு திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பிரசாந்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து வாசுவை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement