அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆஜர்: சூதாட்ட செயலி விவகாரத்தில் விசாரணை
                 Advertisement 
                
 
            
        அதன்பேரில் தெலங்கானா மாநில போலீசார், நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, நடிகைகள் மஞ்சுலட்சுமி, நிதி அகர்வால், பிரனீதா உள்ளிட்ட பல முன்னணி திரைபிரபலங்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமலாக்கத்துறை இந்த ஆன்லைன் விளம்பரங்களில் நடித்ததில் எவ்வாறு பணம் பெறப்பட்டது என்பது குறித்து விசாரிக்க நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய்தேவரகொண்டா, நடிகை மஞ்சுலட்சுமி ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று ஐதராபாத்தில் உள்ள அமலாத்துறை அலுவலகத்தில் தனது வழக்கறிஞருடன் நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
                 Advertisement 
                
 
            
        