தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

12,000 ஊழியர்கள் பணி நீக்கம்: டிசிஎஸ் அறிவிப்பு

புதுடெல்லி: தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.  இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் டாடா குழுமத்துக்கு சொந்தமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(டிசிஎஸ்) நிறுவனமும் ஒன்று. புகழ் பெற்ற மற்றும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ்-சில் பணி புரிவது என்பது இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாக உள்ளது.
Advertisement

ஜூன் 30 2025 நிலவரப்படி, டிசிஎஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை 6,13,069ஆக இருந்தது. அண்மையில் முடிவடைந்த ஏப்ரல் ஜூன் வரையிலான காலாண்டில் கூடுதலாக 5,000 பணியாளர்கள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் 12,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய டிசிஎஸ் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வௌியிட்ட அறிக்கையில், “தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், சந்தை விரிவாக்கம், பணியாளர் சீரமைப்பு, பணியாற்றும் முறைகளில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் எதிர்காலத்துக்கு தயாராவதற்கான பயணத்தில் டிசிஎஸ் உள்ளது.

இதனால் 12,000 ஊழியர்களை பணி நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கை 2026ம் நிதியாண்டில்(அதாவது ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரை) படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது. டிசிஎஸ்-சின் இந்த அறிவிப்பு இந்தியா மட்டுமின்றி உலகளவில் உள்ள அந்நிறுவன பணியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு தேவையான பொருத்தமான சலுகைகள், ஆலோசனை உள்ளிட்டவற்றை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வழங்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Related News