தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவில் தேர்தல்கள் திருடப்படுகின்றன: ராகுல் காந்தி கடும் தாக்கு ;விரைவில் ஆதாரங்களை வௌியிடுவதாக தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் தேர்தல்கள் திருடப்படுகின்றன, இதுகுறித்த ஆதாரங்கள் விரைவில் வௌியிடப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து இதுவரை நீக்கப்பட்டுள்ளனர். இது வெறும் 52 லட்சம் வாக்காளர்கள், பீகாரை பற்றியது மட்டுமல்ல. மகாராஷ்டிராவிலும் இதுபோன்ற மோசடி நடந்துள்ளது.
Advertisement

நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலையும், வாக்குப்பதிவின் வீடியோ பதிவையும் கேட்டோம். ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை தரவில்லை. அதற்கு பதிலாக விதிகளையே மாற்றி வீடியோக்களை வௌியிடாமல் பார்த்து கொண்டனர். மகாராஷ்டிராவில் பேரவை தேர்தலுக்கு முன் 1 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். கர்நாடகாவில் ஒரு மக்களவை தொகுதியில் விரிவாக ஆய்வு செய்தோம். அப்போது மிகப்பெரிய அளவில் வாக்குகள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

புதிய வாக்காளர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி சேர்க்கப்படுகிறார்கள்? தேர்தலில் உண்மையில் யார் வாக்கு செலுத்துகிறார்கள்? எப்படி வாக்குகள் திருடப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. விரைவில் அதை வௌியிடுவோம்” என இவ்வாறு கூறினார்.

Advertisement