தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் அடுத்த ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் நடத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஒரு மாத கால சிறப்பு தீவிர பயிற்சி முடிந்த நிலையில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. வாக்காளர்கள் தங்களது பெயரை இணையத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம் என்று ஆணையம் அறிவித்துள்ளது.
Advertisement

ஜூன் மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கியது. ஜூலை 25ம் தேதிக்குள் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்தது. தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி, சிறப்பு தீவிர திருத்தம் தொடங்குவதற்கு முன்னர் மொத்தம் 7.93கோடி வாக்காளர்கள் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக இருந்தனர். தற்போது 7.23கோடி வாக்காளர்கள் தங்களது கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்துள்ளனர்.

35லட்சம் நிரந்தரமாக இடம்பெயர்ந்தனர் அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை. 22 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர். 7லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். 1.2லட்சம் வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இப்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Related News