தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்ட விவகாரம் புகார்தாரரிடம் 2வது நாளாக எஸ்ஐடி சரமாரி கேள்வி

பெங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் புகார்தாரரிடம் நேற்று எஸ்.ஐ.டி தலைவர் டிஜிபி பிரோணாவ் மொஹந்தி மணிக்கணக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டார். தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர் கொடுத்த புகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை விசாரிக்க மாநில அரசு, டிஜிபி பிரணோவ் மொஹந்தி தலைமையில் ஐபிஎஸ் அதிகாரிகள் எம்.என்.அனுசேத், சவுமியலதா, ஜிதேந்திர குமார் தயாமா ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.
Advertisement

எஸ்.ஐ.டி விசாரணையைத் தொடங்கி தீவிரப்படுத்தியுள்ளது. மங்களூரு மல்லிகட்டேவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் எஸ்.ஐ.டி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தர்மஸ்தலா காவல் நிலைய ஆய்வாளரிடம் ஆதாரங்களைப் பெற்று அவரிடம் தகவல்கள் பெறப்பட்டன. டிஐஜி அனுசேத் இந்த வழக்கு விசாரணையை மேற்பார்வையிடும் அதிகாரியாகவும், ஐபிஎஸ் அதிகாரி ஜிதேந்திர தயாமா இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டிஐஜி அனுசேத், எஸ்.ஐ.டி-யில் நியமிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் எஸ்.ஐ.டி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். மேலும், ஒரு சில இடங்களில் நேரில் ஆய்வு செய்தனர். கடந்த சனிக்கிழமை தனது வழக்கறிஞர்கள் 2 பேருடன் விசாரணைக்கு ஆஜரான புகார்தாரரிடம் எஸ்.ஐ.டி அதிகாரி அனுசேத் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தார்.

இந்நிலையில், நேற்று 2வது நாளாக எஸ்.ஐ.டி முன் ஆஜரான புகார்தாரரிடம் எஸ்.ஐ.டி தலைவர் பிரணோவ் மொஹந்தி மணிக்கணக்கில் ஏராளமான கேள்விகளைக் கேட்டார். புகார் கொடுத்த தூய்மைப் பணியாளர், தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூட பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறியதுடன், மண்டை ஓட்டுடன் புகார் அளித்ததால், மண்டை ஓடு, பாதிக்கப்பட்ட உறவுக்காரப் பெண் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

புகார்தாரரிடம் எஸ்.ஐ.டி அதிகாரி பிரோணாவ் மொஹந்தி கேட்ட கேள்விகள்:

* நூற்றுக்கணக்கான உடல்களை புதைத்தபோது உங்களுடன் இருந்தவர்கள் யார்?

* உடல்களை அடக்கம் செய்ய உங்களை கட்டாயப்படுத்திய மேற்பார்வையாளரின் பெயர் என்ன?

* நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மண்டை ஓடு யாருடையது?

* நீங்கள் புதைத்த உடல்களில், உங்களுக்குத் தெரிந்தவர்களின் உடல்கள் ஏதேனும் இருந்ததா?

* பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுடன் உங்களுக்கு என்ன உறவு?

இதுபோன்ற ஏராளமான கேள்விகள் அவரிடம் கேட்டு, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. புகார்தாரரையும் எஸ்.ஐ.டி காவலில் எடுக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Related News