தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்ட விவகாரம் 5வது நாள் சோதனையில் எதுவுமே சிக்கவில்லை
எஸ்ஐடியின் ரகசியம் பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, 7வது பள்ளம் தோண்டும் பகுதியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. சோதனையின்போது சுற்றிலும் திரை சீலைகள் கட்டப்பட்டு குழி தோண்டப்பட்டது.
7 மற்றும் 8 புள்ளிகளில் எதுவும் கிடைக்காததால் இன்று மீண்டும் 9வது பாயின்ட்டில் பள்ளம் தோண்டப்படும் என கூறப்படுகிறது. இது வரை கிடைத்த 25 மனித எலும்புகள் மணிப்பால் மருத்துவமனைக்கு பரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.