தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தர்மஸ்தலாவில் தோண்டப்பட்ட 9,10ம் இடங்களிலும் எதுவும் சிக்கவில்லை

பெங்களூரு கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக முன்னாள் தூய்மைப் பணியாளர் கொடுத்த புகாரை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. டிஜிபி பிரணாவ் மொஹந்தி தலைமையில் எஸ்.ஐ.டி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. புகார்தாரரிடம் விசாரணை நடத்தி, பின்னர் அவரை சம்பந்தப்பட்ட நேத்ராவதி ஆறு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று, உடல்கள் புதைக்கப்பட்டதாக புகார்தாரர் காட்டிய 13 இடங்கள் குறிக்கப்பட்டன. பின்னர் அந்த இடங்கள் ஒவ்வொன்றாக தோண்டப்பட்டு வருகின்றன.
Advertisement

கடந்த வெள்ளிக்கிழமை வரை தோண்டப்பட்ட 8 இடங்களில் ஒரு நபருடைய உடல் பாகங்களின் 12 எலும்புகளும், ஒரு மண்டை ஓடும் மட்டுமே கிடைத்தன. நேற்று காலை 11.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 9 மற்றும் 10 ஆகிய இரண்டு இடங்கள் தோண்டப்பட்டன. சாலையோரம் உள்ள காட்டுப்பகுதியில் இந்த இடங்கள் இருந்ததாலும், விசாரணையில் ரகசியம் காக்கும் நோக்கிலும், 9 மற்றும் 10 ஆகிய இடங்கள் முழுமையாக திரையிட்டு மறைக்கப்பட்டு தோண்டப்பட்டன. 9 மற்றும் 10ம் இடங்களிலும் எதுவும் கிடைக்கவில்லை என்றே தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், 13வது இடத்தில் நிறைய சடலங்கள் கிடைக்கும் என்றும், குறிப்பாக பள்ளி மாணவி ஒருவர் அங்கு புதைக்கப்பட்டிருப்பதாகவும் புகார்தாரர் கூறியிருக்கிறார். அவர் காட்டிய அனைத்து இடங்களிலும் முழுமையாகத் தோண்டி உண்மையைக் கண்டறியும் முனைப்பில் இருக்கும் எஸ்.ஐ.டி, இன்றைய தினம் எஞ்சிய இடங்களில் தோண்டும் பணிகளை தொடர இருக்கின்றனர்.

Advertisement

Related News