தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் பாலியல் உறவுக்கான சம்மத வயதை 18க்கு கீழ் குறைக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

புதுடெல்லி: இந்தியாவில் பாலியல் உறவுக்கான சம்மத வயது நிர்ணயம் என்பது ஒரு சட்ட வரையறையை கொண்டுள்ளது. அதாவ்து கடந்த 1860ல் இந்திய தண்டனைச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, இரு பாலருக்கான பாலியல் உறவு என்பது 10 வயதாக இருந்தது. பின்னர் அதுவே 1891ம் ஆண்டு 12ஆகவும், 1925ல் 14கவும், 1940ல் 16ஆகவும் படிப்படியாக உயர்த்தப்பட்டது. இறுதியாக, 1978ம் ஆண்டு குழந்தை திருமணத் தடைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம், இந்த வயது வரம்பு 18ஆக நிர்ணயிக்கப்பட்டு இன்று வரையில் நடைமுறையில் இருந்து வருகிறது.

குறிப்பாக 18 வயதுக்குக் குறைவானவர்களுடன் உடலுறவு கொள்வது, அவர்களின் சம்மதத்துடன் நடந்தாலும் அது சட்டப்படி குற்றமாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், ‘‘குழந்தைகளை பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாப்பதற்காகவே பாலியல் உறவுக்கான சம்மத வயது வரம்பு 18 வயதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, உறவினர்கள் அல்லது நன்கு அறிமுகமானவர்களால் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுக்க இந்தச் சட்டம் உதவுகிறது. மேலும் போக்சோ போன்ற குழந்தை பாதுகாப்புச் சட்டங்களின் வலிமையைக் குறைக்கும் என்பதால், 18 என்று நிர்ணயம் செய்யப்பட்ட வயது வரம்பைக் குறைப்பது சாத்தியமில்லை. அவ்வாறு செய்து விட்டால் இந்த விவகாரத்தில் பல ஆண்டுகளின் முன்னேற்றத்தைப் பின்நோக்கி தள்ளுவது போலாகிவிடும். இருப்பினும், இந்த விவகாரத்தில் நீதிமன்றங்கள் ஒவ்வொரு வழக்கின் தன்மைக்கேற்ப தங்களின் தன்னிச்சையான அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். அதற்கு எந்தவித தடையும் கிடையாது.

அதாவது காதல் உறவுகளில் ஈடுபடும், ஏறக்குறைய சம வயதுடைய நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் உரிய தன்னிச்சையான முடிவுகளை எடுக்கலாம். அதில் எந்தவித சமரசமும் இல்லை. மேலும் தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் தரவுகளின் படி குழந்தைகளுக்கு எதிராக 50சதவீதத்திற்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள், அவர்களுக்கு நன்கு தெரிந்த நபர்களாலேயே நிகழ்த்தப்படுவதால், 18வயது என்ற சம்மத வயது வரம்பை மாற்றுவது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.