தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாடு முழுவதும் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பில் 2000 ஐடிஐக்கள் மேம்படுத்தும் பணி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பில் 2000 ஐடிஐக்களை மேம்படுத்தும் பணியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பிலான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை டெல்லி விஞ்ஞான் பவனில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.

Advertisement

இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 2,000 ஐடிஐக்கள் மேம்படுத்தப்பட உள்ளன. மேலும் பீகாரில் புதுப்பிக்கப்பட்ட முக்கியமந்திரி நிச்சய ஸ்வயம் சஹாயத பட்டா யோஜனா திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் 5 லட்சம் பட்டதாரிகள் இலவச திறன் பயிற்சியுடன் 2 ஆண்டுகளுக்கு தலா ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை பெறுவார்கள். பீகாரில் மாணவர் கல்விக் கடன் அட்டை திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் ரூ.4 லட்ம் வரை வட்டியில்லா கல்விக் கடன்கள் வழங்கப்படும். யுவ ஆயோக் திட்டத்தையும், பீகாரில் ஜனநாயக் கர்பூரி தாக்கூர் திறன் பல்கலைக்கழகத்தையும் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ பீகார் மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கல்வியில் ஏற்பட்ட அழிவு பற்றி தற்போதைய இளைஞர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இதனால் மாணவர்கள் மாநிலத்தை விட்டு மற்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) ஆட்சியின் போது பீகார் மாநிலம் இப்படித்தான் இருந்தது. பாஜ கூட்டணி அரசு அமைந்ததும் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது’’ என்றார்.

Advertisement

Related News