தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாடாளும் தகுதி பாஜவுக்கு இல்லை: ஆ.ராசா ஆவேசம்

புதுடெல்லி: மக்களவையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, ‘பாஜவுக்கு நாடாளும் தகுதி இல்லை’ என ஆவேசமாக பேசினார். அவர் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில், குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாலே வெற்றி எனக் கூறக் கூடாது. பஹல்காம் தாக்குதல் குறித்து உளவுப் பிரிவும், ரா அமைப்பும் பல முன்னெச்சரிக்கைகளைக் கொடுத்த பிறகும் அரசு எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவில்லை. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குழந்தை போல பேசுகிறார். ‘‘எத்தனை பென்சில் உடைந்தது என்று கேட்காதீர்கள் தேர்வின் முடிவை பாருங்கள்’’ என்கிறார். போரில் இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பதற்கு, இந்தியா வென்றதை பாருங்கள் என கூறுகிறார்.
Advertisement

பஹல்காம் தாக்குதல் உளவுத்துறை தோல்வியால் நிகழ்ந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது நிர்வாகத்தின் திறமையின்மையையும் நாட்டை நிர்வகிக்க இயலாமையையும் காட்டுகிறது. இந்த நாட்டை ஆளுவதற்கு பாஜவுக்கு தகுதியில்லை. அத்தகைய அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் நேருவை பின்பற்ற வேண்டாம். அது உங்களால் முடியாது. அதற்கு தகுதியும் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் பாஜ பிரதமரான வாஜ்பாயையாவது பின்பற்றுங்கள். கார்கில் போருக்கு பிறகு அவர் விளக்க அறிக்கை வெளியிட்டதை பின்பற்றுங்கள். இவ்வாறு ஆ.ராசா கூறினார்.

மோடி அவைக்கு வராது ஏன்? திருச்சி சிவா எம்பி கேள்வி

மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் போது திமுக எம்.பி திருச்சி சிவா பேசுகையில்,’ நம்முடைய பிரதமர் எங்கே? நாங்கள் அவரைப் பார்க்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அவரைப் பார்க்கவில்லை. நாடாளுமன்றம்தான் உயர்ந்தது. மோடி தன்னை கடவுளின் மகன் என்றார். அந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே அவர் கண்ணுக்குத் தெரியாதவர்’ என்றார்.

Advertisement

Related News