தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிறிஸ்தவ போதகர் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு சிக்கல்: குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

Advertisement

புதுடெல்லி: கிறிஸ்தவ போதகர் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்பி ஞானதிரவியம் உள்ளிட்டோர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகத்துக்குச் சென்ற இட்டேரி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் காட்ப்ரே நோபிள் என்பவரை, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி முன்னாள் எம்.பி. ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாக, ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து மேற்கண்ட வழக்கில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும், ஞானதிரவியம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், ‘‘போதகர் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்பி ஞானதிரவியம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய முடியாது. அதேப்போன்று வழக்கிலிருந்து விடுவிக்கவும், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரும் மனுக்களை திருநெல்வேலி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதியளித்த உச்ச நீதிமன்றம், ஞானதிரவியத்தின் மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Related News