தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீட் பங்கீடு பார்முலா முடிந்தது; சம பலத்துடன் போட்டியிடும் பாஜக - நிதிஷ் கட்சி?... பீகார் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது

Advertisement

பாட்னா: பீகாரில் ஆளும் கூட்டணியின் சீட் பங்கீடு பார்முலா முடிந்த நிலையில், சம பலத்துடன் பாஜக - நிதிஷ்குமார் கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ளன. பீகாரில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக ஆகியவை முக்கியப் பங்காற்றும் இந்தக் கூட்டணியில், மற்ற சிறிய கூட்டணிக் கட்சிகளைச் சமாதானப்படுத்தி, அனைவருக்கும் திருப்தியளிக்கும் வகையில் சீட் ஒதுக்கீடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் கிட்டத்தட்ட சரிசமமான தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளன. அதாவது ஐக்கிய ஜனதா தளம் 102 இடங்களிலும், பாஜக 101 இடங்களும் ஒதுக்கிக் கொண்டுள்ளன. கூட்டணியின் முக்கிய அங்கமாக இருக்கும் ஒன்றிய அமைச்சரான சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சிக்கு (ராம் விலாஸ்) முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. அதன்படி, சிராக் பஸ்வான் கட்சிக்கு 18 முதல் 22 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், கூடுதலாக ஒரு ராஜ்யசபா இடமும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கூட்டணியில் உள்ள மற்ற முக்கிய கட்சிகளான, முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் ‘ஹெச்ஏஎம்’ மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ‘ஆர்எல்எஸ்பி’ ஆகிய கட்சிகளுக்கு தலா 7 முதல் 8 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, வரும் தேர்தலில் மெகா வெற்றியைப் பதிவு செய்வதே இந்த வியூகத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பீகார் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Related News