தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வழங்கிய பீகார் அரசு: வீடியோ வைரலானதால் அதிகாரி மீது மாநில அரசு வழக்கு

Advertisement

பாட்னா: பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. இதில் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவை வாக்காளர் உரிமை பெற தகுதியான ஆவணம் அல்ல. இருப்பிட சான்று, பிறப்பு சான்று உள்ளிட்ட 11 ஆவணங்கள் மட்டுமே ஏற்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், பாட்னா அருகே மசவுரி பகுதியில் ஒரு நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் நாயின் புகைப்படத்துடன் அதன் பெயர், நாய் பாபு, தந்தை பெயர் குத்தா பாபு, தாய் குத்தியா தேவி என குறிப்பிடப்பட்டுள்ளது.

சான்றிதழில் அதிகாரியின் கையொப்பமும் இடம் பெற்றுள்ளது. சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரி மீது மாநில அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சான்றிதழை வைத்து நாய்க்கு வாக்காளர் அட்டை வழங்கப்படும். ஆனால், ஆதார் மற்றும் ரேஷன் அட்டையை தேர்தல் ஆணையம் ஏற்று கொள்ள மறுக்கிறது என சமூக ஊடகங்களில் பலர் விமர்சித்துள்ளனர்.

Advertisement

Related News