தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரில் முதல் கட்ட சட்டமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

பாட்னா: பீகாரில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6ம் தேதியும் மீதமுள்ள122 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக நவம்பர் 11ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 14ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இதனை தொடர்ந்து முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது.வருகிற 17ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 18ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.

Advertisement

வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு 20ம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியானது இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளிடையே ஒருமித்த கருத்துஎட்டப்படாததால் வேட்பாளர்கள் பட்டியலில் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனினும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியானது நேற்று முன்தினம் 51 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement