தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெங்களூரு பஸ் நிலைய கழிவறையில் வெடி பொருட்கள் பறிமுதல்

பெங்களூரு: பெங்களூரு கலாசிபாளையத்தில் மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பேருந்துகள் நிற்கும் பேருந்து நிலையம் உள்ளது. நேற்று காலை 11 மணியளவில் பேருந்து நிலையத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர், கழிவறை சென்று, அங்கிருந்த மேஜை மீது பை ஒன்று வைத்து விட்டு சென்றார். நான்கு மணி நேரம் கடந்தும், மேஜை மீது வைத்த பையை யாரும் எடுத்து செல்லவில்லை. இதில் சந்தேகமடைந்த கழிவறை ஊழியர் உடனடியாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
Advertisement

போக்குவரத்து கழக அதிகாரிகள் கலாசிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக இணை போலீஸ் கமிஷனர் கிரிஷ் தலைமையில் போலீஸ் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் வந்தனர். மேஜை மீது இருந்த பையை மோப்ப நாய் பரிசோதித்து சத்தம் போட்டது. உடனடியாக பலத்த பாதுகாப்புடன் வெடி குண்டு நிபுணர்கள், பையை சோதனை செய்தனர். அந்த பையில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் ஜெலிட்டின் குச்சிகள், டெடனேட்டர் ஒயர்கள் இருந்தது.

அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், கழிவறை மட்டுமில்லாமல் பேருந்து நிலையத்தில் வேறு எங்கேயாவது வெடிகுண்டுகள் வைத்துள்ளார்களா? என்று மாநகர மற்றும் தனியார் பேருந்து நிலையம் முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு கிடைக்கவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கழிவறையில் பை வைத்து சென்ற மர்ம நபரை தேடுகின்றனர்.

Advertisement

Related News