தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலகோட் தாக்குதலில் பங்கேற்ற போர் விமானி, மனைவிக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: கடந்த 2019ல் தீவிரவாத முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் எல்லைக்கு அப்பால் உள்ள பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பங்கேற்ற போர் விமானி ஒருவர், குடும்ப தகராறு காரணமாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனைவி அளித்த புகாரின் கீழ் ஐஐஎம் பட்டதாரியான அந்த போர் விமானி மீது போலீசார் பதிவு செய்த எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
Advertisement

அந்த வழக்கு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், தனது மனைவி மற்றும் மாமனாரால் தானும் தனது குடும்பத்தினரும் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘பழிவாங்கும் வாழ்க்கையை நடத்தாதீர்கள்.

நீங்கள் இருவரும் இளமையாக உள்ளீர்கள். உங்களுக்கு நீண்ட ஆயுள் உள்ளது. எனவே ஒருவரையொருவர் மன்னித்து, பிரச்னையை மறந்து வாழுங்கள். நீங்கள் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும். எனவே பிரச்னையை சுமூகமாக தீர்த்துக் கொள்ளுங்கள்’’ என அறிவுறுத்தி, மனைவி தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர்.

Advertisement

Related News