தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் கூடுதலாக 6.5 லட்சம் வாக்காளர்களை சேர்க்க இருப்பது சட்ட விரோதம்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

Advertisement

புதுடெல்லி: பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் தேர்தல் முறைகளை தேர்தல் ஆணையம் மாற்ற முயற்சிக்கிறது.தேர்தல் ஆணையத்தின் அதிகார துஷ்பிரயோகத்தை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்து போராட வேண்டும். பீகாரில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் விசித்திரமாக உள்ளது. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். அதே நேரம் தமிழ்நாட்டில் கூடுதலாக 6.5 லட்சம் வாக்காளர்கள் சேர்க்க இருப்பதாக கூறப்படும் தகவல் ஆபத்தானது, சட்டவிரோதமானது.

அவர்களை நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என்று அழைப்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவமதிப்பதாகும். மேலும் தமிழ்நாட்டின் வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடுவதாகும் என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் கூறுகையில்,‘‘தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை கேள்விக்குறியாக உள்ளது. அதனால்தான் எதிர்க்கட்சிகள் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க விரும்புகின்றன.தேர்தல் ஆணையர் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவர். தேர்தல் ஆணையம் குறித்த விவாதத்தை பாஜ அரசு அனுமதிக்க மறுக்கிறது’’ என்றார்.

 

Advertisement