தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆந்திராவில் தனியார் குவாரியில் விபத்து கிரானைட் பாறைகள் சரிந்து 6 பேர் பலி: 10 பேர் படுகாயம்

திருமலை: பாபட்லாவில் தனியார் குவாரியில் கிரானைட் பாறைகள் சரிந்து 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், பல்லிகுரவா அருகே தனியார் கிரானைட் குவாரி இயங்கி வருகிறது. இதில் 16 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கிரானைட் கற்களை வெட்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கிரானைட் பாறைகள் சரிந்து அங்கிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் 6 தொழிலாளர்கள் பாறைக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 10 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நரசராவ்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அனைவரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் தகவலறிந்த வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், குவாரி நிர்வாகம் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை தெரியவந்தது. மேலும், இறந்தவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாபட்லா கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

Related News