தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

12 ஆயிரம் ஊழியர்கள் டிஸ்மிஸ் அறிவிப்பு எதிரொலி டிசிஎஸ் பங்கு சரிவால் ரூ.28,149 கோடி இழப்பு: இந்திய ஐடி துறையில் பெரும் பதற்றம்

மும்பை: ஆட்குறைப்பு அறிவிப்பால் டிசிஎஸ் பங்குகள் கடந்த 2 நாட்களாக சரிவை கண்டுள்ள நிலையில், ரூ.28,149 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள தனது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் 12,261 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது செயல்திறன் குறைபாடு காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை என்றும், நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பகுதியாகவே ஆட்குறைப்பு நடைபெறுகிறது என்றும் டிசிஎஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement

இன்போசிஸ், விப்ரோ போன்ற பிற முக்கிய இந்திய நிறுவனங்களும் இதேபோன்ற ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் ஊழியர்களிடையே பரவி, இந்திய ஐடி துறையில் பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பை வெளியான உடனேயே இந்திய பங்குச்சந்தையில் அதன் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்தன. இதன் காரணமாக, ஒரே நாளில் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் சுமார் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டு, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்றும் இந்த நிலை நீடித்தது. நேற்று வர்த்தகம் தொடங்கியபோதும் பங்குகளின் வீழ்ச்சி நீடித்தது. குறிப்பாக, வர்த்தகம் தொடங்கிய முதல் 15 நிமிடங்களிலேயே, முதலீட்டாளர்களின் முதலீடு மேலும் ரூ.6,550 கோடி கரைந்தது. இந்த தொடர் சரிவின் விளைவாக, டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.11.07 லட்சம் கோடியாகக் குறைந்தது. ஆட்குறைப்பு அறிவிப்பால், இரண்டு நாட்களில் மட்டும் டிசிஎஸ் பங்குகள் ரூ.28,149 கோடி இழப்பை சந்தித்து உள்ளன. தற்போது டிசிஎஸ் மொத்த சந்தை மதிப்பு ரூ.11,05,886.54 கோடியாக உள்ளது.

* டிசிஎஸ் சிஇஓவுக்கு ரூ.26 கோடி சம்பளமா?

டிசிஎஸ்சில் இருந்து 12 ஆயிரம் ஊழியர்கள் நீக்கப்படும் நிலையில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி கே. கிருத்திவாசன் ஆண்டுக்கு ரூ.26 கோடிக்கு மேல் ஊதியம் பெறுவது இணையதளத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருத்திவாசனின் அடிப்படை சம்பளமாக ரூ.1.39 கோடி, சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளாக ரூ.2.12 கோடி, கமிஷன்களாக ரூ.23 கோடி ஆகியவையும் இதில் அடங்கும். 2025 நிதியாண்டிற்கான அவரது மொத்த சம்பளம் ரூ.26.52 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News