தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவில் புதிய சாதனை 7.28 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்: ஒன்றிய அரசு தகவல்

Advertisement

புதுடெல்லி: இந்தியா முழுவதும் 7.28 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வருமானவரிக்கணக்குகளை தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி நள்ளிரவு வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த காலக்கெடுவுக்குள் இந்த ஆண்டு நாடு முழுவதும் 7.28 கோடி பேர் வருமான வரிக்கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இது, 7.5 சதவீதம் அதிகமாகும். 2023ல் 6.77 கோடி பேர் வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்து இருந்தனர்.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்த 7.28 கோடி பேரில் 5.27 கோடி கணக்குகள் புதிய வரி முறையையும், 2.01 கோடி கணக்குகள் பழைய வரி முறையையும் தேர்வு செய்துள்ளனர். இதை பார்க்கும் போது சுமார் 72 சதவீத வரி செலுத்துவோர் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதே நேரத்தில் 28 சதவீதம் பேர் பழைய வரி முறையிலேயே உள்ளனர். அதே போல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாளான ஜூலை 31 அன்று மட்டும் ஒரே நாளில் 69.92 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு அதிகபட்சமாக 58.57 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

Advertisement

Related News