இந்தியாவில் ஜேசிபியை பார்க்க 10ஆயிரம் பேர் கூடுவார்கள் 10 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் விருது பெறும் பிரதமர் மோடி: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கருத்து
Advertisement
அவர் செல்லும் நாடுகளில் பத்தாயிரம் மக்கள் தொகை உள்ளது. மேலும் அங்கு மிகப்பெரிய விருது பெறுகிறார் இங்கே ஜேசிபி இயந்திரத்தை பார்க்கவே பத்தாயிரம் பேர் கூடுகிறார்கள். அவர் 11ஆண்டுகளில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை கூட நடத்தவில்லை” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் பெயர் குறிப்பிடாமல் முதல்வர் பக்வந்த் மானின் விமர்சனத்தை வெளியுறவு துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது குறித்து வெளியுறவு துறை அமைச்சகம், ‘‘நட்பு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் உயர் அரசு அதிகாரி கூறிய தேவையற்ற கருத்துக்களில் இருந்து இந்திய அரசு தன்னை ஒதுக்கி கொள்கிறது ” என்று குறிப்பட்டுள்ளது.
Advertisement