தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவில் ஜேசிபியை பார்க்க 10ஆயிரம் பேர் கூடுவார்கள் 10 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் விருது பெறும் பிரதமர் மோடி: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கருத்து

Advertisement

சண்டிகர்: பிரதமர் மோடி தனது 5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்து நேற்று முன்தினம் இந்தியா திரும்பினார். இந்நிலையில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து பஞ்சாப் முதல்வர் மான் விமர்சித்து இருந்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது முதல்வர் மான், ‘‘பிரதமர் ஜீ கானாவுக்குச் சென்றுள்ளார்? அவர் நாடு திரும்பியதும் வரவேற்கப்படுவார். அவர் எந்த நாடுகளுக்கு சென்று வருகிறார் என்பது எனக்கு தெரியவில்லை.அந்த நாட்டின் பெயர், மெக்னீசியாவா, கால்வேசியாவா அல்லது தார்வேசியாவா என்று கடவுளுக்கு மட்டும்தான் தெரியும் . ஆனால் 140கோடி மக்கள் வசிக்கும் இந்திய நாட்டில் அவர் தங்கவில்லை.

அவர் செல்லும் நாடுகளில் பத்தாயிரம் மக்கள் தொகை உள்ளது. மேலும் அங்கு மிகப்பெரிய விருது பெறுகிறார் இங்கே ஜேசிபி இயந்திரத்தை பார்க்கவே பத்தாயிரம் பேர் கூடுகிறார்கள். அவர் 11ஆண்டுகளில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை கூட நடத்தவில்லை” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் பெயர் குறிப்பிடாமல் முதல்வர் பக்வந்த் மானின் விமர்சனத்தை வெளியுறவு துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது குறித்து வெளியுறவு துறை அமைச்சகம், ‘‘நட்பு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் உயர் அரசு அதிகாரி கூறிய தேவையற்ற கருத்துக்களில் இருந்து இந்திய அரசு தன்னை ஒதுக்கி கொள்கிறது ” என்று குறிப்பட்டுள்ளது.

Advertisement

Related News