தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய எதிரி யார்? குஜராத்தில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

பாவ்நகர்: ‘இந்தியாவின் மிகப்பெரிய எதிரியே, மற்ற நாடுகளை சார்ந்திருப்பதுதான்’ என குஜராத்தில் பிரதமர் மோடி பேசி உள்ளார். குஜராத்தின் பாவ் நகரில் நேற்று ரூ.34,200 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: உலகளாவிய சகோதரத்துவ உணர்வோடு இந்தியா முன்னேறி வருகிறது, இன்று உலகில் இந்தியாவுக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை.

Advertisement

ஆனால் உண்மையில் நம்முடைய மிகப்பெரிய எதிரி, மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இந்த சார்பு நிலையை நாம் கூட்டாக தோற்கடிக்க வேண்டும். அதிக வெளிநாட்டு சார்பு அதிக தேசிய தோல்விக்கு வழிவகுக்கும். 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை அந்நிய சக்திகளிடம் விட்டுவிட முடியாது. நாட்டின் வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை, அந்நிய சார்புநிலையின் அடிப்படையில் வைத்திருக்க முடியாது.

வரவிருக்கும் தலைமுறைகளின் எதிர்காலத்தை மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு மற்றவர்களைச் சார்ந்திருந்தால், அது தேசிய சுயமரியாதையை சமரசம் செய்வதாகும். 100 வகையான வலிகளுக்கு ஒரே தீர்வு உண்டு என பிரபலமான பழமொழியில் சொல்வார்கள். அது போல, இந்தியாவின் அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது.

அதுதான் ஆத்மநிர்பார் (சுயசார்பு). உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சுயசார்புடையதாக மாற வேண்டும். செமி கண்டக்டர்கள் முதல் கப்பல்கள் வரையிலும் அனைத்தையும் நாம் இந்தியாவில் தயாரிக்க வேண்டும். உள்நாட்டு துறைமுகங்கள் உலகளாவிய கடல்சார் மையமாக மாறுவது இந்தியாவின் எழுச்சிக்கு முதுகெலும்பாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News