தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து!

கான்பரா: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9.4 ஓவருக்கு 97 ரன்கள் குவித்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி இன்று கான்பராவில் தொடங்கியது. ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் இந்திய அணி களமிறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 19 ரன்கள் எடுத்திருந்தபோது நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் உடன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கைகோர்த்தார்.

இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர். இந்தியா 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. ஓயாமல் பெய்த மழையால் ஆட்டத்தை மீண்டும் தொடங்காத நிலை ஏற்பட்டது. இதனால் இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சூர்யகுமார் யாதவ் 24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ரன்களும், சுப்மன் கில் 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 37 ரன்களும் எடுத்தனர். இரு அணிகளுக்கிடையேயான 2து டி20 போட்டி அக்டோபர் 31 வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்க உள்ளது .

Advertisement