தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வக்பு சட்டம் குப்பை தொட்டியில் வீசப்படும்: பீகாரில் தேஜஸ்வி யாதவ் பிரசாரம்

கதிஹார்: பீகாரில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி, இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கதிஹார், கிஷன்கஞ்ச், அராரியா மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: ஆர்ஜேடி தலைவரான எனது தந்தை லாலு பிரசாத் வகுப்புவாத சக்திகளுடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை.

Advertisement

ஆனால், முதல்வர் நிதிஷ்குமார் அத்தகைய சக்திகளை எப்போதும் ஆதரிக்கிறார். அதனால்தான் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் மாநிலத்திலும் நாட்டிலும் வகுப்புவாத வெறுப்பை பரப்புகின்றன. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வக்பு சட்ட திருத்தத்தை நாங்கள் குப்பை தொட்டியில் வீசி எறிவோம். இந்தத் தேர்தல் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் சகோதரத்துவத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம்.

கடந்த 20 ஆண்டுகால நிதிஷ் குமார் அரசால் மாநில மக்கள் சோர்வடைந்துள்ளனர். நிதிஷ் குமார் தேங்கி நிற்கும் தண்ணீரைப் போல மாறிவிட்டார், அது ஓடுவதை நிறுத்திவிட்டது. இப்போது அது துர்நாற்றம் வீசுகிறது. எனவே தேசிய ஜனநாயக கூட்டணி அரசை தூக்கி எறிய வேண்டும். முதல்வர் நிதிஷ்குமார் சுயநினைவில் இல்லை. அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையிலும் ஊழல் பரவலாக உள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை முற்றிலும் சரிந்துவிட்டது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக சீமாஞ்சல் மேம்பாட்டு ஆணையத்தை அமைப்போம். சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மையம் தவிர, உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் இங்கு கட்டப்படும். பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகளின் சம்பளத்தை உயர்த்துவோம். பென்சன் வழங்குவோம், ரூ.50 லட்சத்திற்கு காப்பீடு வழங்குவோம்.

முடிதிருத்தும் தொழிலாளிகளுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்குவோம். சமீபத்தில் அமித் ஷா பீகாருக்கு வந்தபோது, தேர்தலில் போட்டியிட விடமாட்டேன் என்று எங்களை மிரட்டினார். நான் போராடுவேன், நான் வெற்றி பெறுவேன். நாங்கள் பீகாரிகள், உண்மையான பீகாரிகள், வெளியாட்களுக்கு நாங்கள் பயப்படுவதில்லை. ஒரு பீகாரி மற்ற அனைவரையும் விட வலிமையானவர். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.

Advertisement

Related News