தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் முதல்முறையாக பதக்கம் வென்ற இந்தியா

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் ஆசிய அலைச்சறுக்கு போட்டியின் இறுதிச் சுற்றில், இன்று முதன்முறையாக இந்திய வீரர் ஒருவர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஆசியன் அலைச்சறுக்கு கூட்டமைப்பு மற்றும் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு இணைந்து, தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் மாமல்லபுரத்தில் கடந்த 4ம் தேதி முதல் ஆசிய அலைச்சறுக்கு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், சீனா, இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா, குவைத், லெபனான், மலேசியா, மாலத்தீவுகள் உள்பட 19 நாடுகளை சேர்ந்த 102 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அன்று முதல் நாள்தோறும் பல்வேறு சுற்றுகள் அடிப்படையில் போட்டிகள் நடந்து வருகின்றன.

Advertisement

இந்நிலையில், இன்று காலை ஆண்களுக்கான ஓபன் இறுதி போட்டி பரபரப்புடன் துவங்கியது. இதில், அலைச்சறுக்கு பலகை மூலமாக, கடலில் இந்தியா, கொரியா, இந்தோனேசியா நாடுகளை சேர்ந்த 4 வீரர்கள் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தினர். இறுதியில், கொரியா நாட்டை சேர்ந்த கனோவா ஹீஜே முதலிடம் பிடித்து தங்க பதக்கமும், இந்தோனேசியாவை சேர்ந்த பஜர் அரியானா 2ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கமும், இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் புடிஹால் 3ம் இடம்பிடித்து, வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். குறிப்பாக, ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் இந்திய வீரர் ஒருவர் வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதேபோல், பெண்கள் ஓபன் பிரிவில் ஜப்பான் வீராங்கனை அன்ரி மாட்சுனோ தங்க பதக்கமும், ஜப்பான் வீராங்கனை சுமோமோ சாடோ வெள்ளி பதக்கமும், தாய்லாந்து வீராங்கனை இசபெல் ஹீக்ஸ் வெண்கல பதக்கமும் வென்று அசத்தினர். அலைச்சறுக்குப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு வரும் 12ம் தேதி மாலை பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News