தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவில் 140 கோடி மக்கள் இருந்தும் எங்களின் மக்காசோளத்தை வாங்குவதில்லையே ஏன்..? எச்சரிக்கை விடுத்த அமெரிக்க வர்த்தக செயலர்

‘வாஷிங்டன்: இந்தியா தனது இறக்குமதி வரிகளைக் குறைக்கவில்லை என்றால், வர்த்தகத்தில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதித்தது. இதில், இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான வரிக்கு 25 சதவீதமும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவீதமும் விதிக்கப்பட்டது.

Advertisement

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ‘அநியாயமானது, நியாயமற்றது மற்றும் ஏற்க முடியாதது’ என்று கண்டித்த இந்தியா, தனது எரிசக்தி கொள்முதல் தேசிய நலன் மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களின் அடிப்படையிலானது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்தச் சூழலில், அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லூட்னிக், இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகளை கடுமையாகச் சாடியுள்ளார். அவர் கூறுகையில், ‘இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உறவு ஒருதலைப்பட்சமாக உள்ளது. இந்தியா தனது அனைத்துப் பொருட்களையும் அமெரிக்காவுக்கு விற்கிறது. ஆனால் அமெரிக்க விவசாயப் பொருட்கள், குறிப்பாக மக்காச்சோளத்தை வாங்குவதில்லை.

140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, எங்களிடமிருந்து சிறிதளவு மக்காச்சோளத்தைக் கூட வாங்காதது ஏன்? இந்தியா தனது இறக்குமதி வரிகளைக் குறைக்கவில்லை என்றால், அமெரிக்கா வேறு வழியில் வரிகளை விதிக்கும். அதிபர் டிரம்பின் கொள்கையானது நியாயமான மற்றும் பரஸ்பர வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இதை ஏற்காத நாடுகள், உலகின் மிகப்பெரிய நுகர்வோரான அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வதில் கடும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும்’ என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மிரட்டல், இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் மேலும் தடைகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.

Advertisement

Related News