தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இந்தியா சிந்து நதியில் அணை கட்டினால் ஏவுகணைகளை கொண்டு தகர்ப்போம்: பாக். ராணுவத் தளபதி மிரட்டல்

வாஷிங்டன்: சிந்து நதியில் இந்தியா அணை கட்டட்டும் என்று தான் காத்துக்கொண்டிருக்கிறோம். இந்தியா மட்டும் அணை கட்டினால் அதை 10 ஏவுகணைகளை கொண்டு தகர்ப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அடாவடியாக பேசியுள்ளார். அது மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா,எடுத்தது. இந்த சம்பவத்துக்கு பின் கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். அதிபர் டிரம்ப், அசிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து அவருக்கு விருந்து அளித்தார். இந்த நிலையில்,அசிம் முனீர் மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஆசிம் முனிர், டாம்பாவில் நடைபெற்ற சென்ட்காம் தளபதி ஜெனரல் மைக்கேல் குரில்லாவின் ஓய்வு விழா மற்றும் புதிய தளபதி அட்மிரல் பிராட் கூப்பரின் பொறுப்பேற்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

அமெரிக்காவில் பேசிய அசிம் முனீர் கூறியதாவது:

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியா முடிவு, 2 கோடி மக்களை பட்டினியில் கிடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா அணையை கட்டட்டும் என்று தான் காத்துக்கொண்டு இருக்கிறோம். இந்தியா மட்டும் அணையை கட்டினால், 10 ஏவுகணகளை கொண்டு அதை தகர்ப்போம். சிந்து நதி என்பது இந்தியாவின் குடும்ப சொத்து இல்லை. எங்களுக்கு ஏவுகணைகளுக்கு ஒன்றும் பற்றாக்குறை இல்லை பாகிஸ்தான் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உலகில் பாதியை அழித்துவிடுவோம் என்று அவர் மிரட்டியுள்ளார்.