தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் டிரோன்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரிப்பு!!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் டிரோன்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழையும் ட்ரோன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் போதைப் பொருள்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கடத்த பயன்படுத்தப்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் பஞ்சாப்பில் டிரோன் மூலம் பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள்களை கடத்தி அதனை மாநிலம் முழுவதும் விநியோகித்து வந்த ஒரு சிறுவன் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Advertisement

அதே போல், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் வீசப்பட்ட போதைப் பொருள் பொட்டலங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில், 2021ல் 3ஆக இருந்த போதைப்பொருள் பறிமுதல் எண்ணிக்கை 2024ல் 179ஆக உயர்ந்துள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், "இந்தியாவில் பஞ்சாப் எல்லைப்பகுதிகளில் அதிகமாக டிரோன்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுகிறது.ஹெராயின், ஓபியம் போன்ற போதைப்பொருட்கள் அதிகமாக கைப்பற்றப்பட்டுள்ளது.

2024ல் போதைப்பொருள் தொடர்பாக என்.சி.பி. 96,930 வழக்கு பதிந்து 1.22 லட்சம் பேரை கைதுசெய்தது. போதைப்பொருள் வழக்குகளில் கைதுசெய்யப்பட்ட 1.22 லட்சம் பேரில் 660 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். கடந்த ஆண்டு 13,306 குவிண்டால் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றட்ட 13,306 குவிண்டால் போதைப்பொருட்களில் அதிகபட்சமாக 5.4 லட்சம் கிலோ கஞ்சா ஆகும்."இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement