இந்தியாவின் அந்நிய கடன் 2025ல் ரூ.65 லட்சம் கோடியாக உயர்வு!!
டெல்லி: 2024 மார்ச்சில் ரூ.58.92 லட்சம் கோடியாக இருந்த நாட்டின் அந்நிய கடன் 2025ல் ரூ.64.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2024 மார்ச் 31ல் இருந்ததை விட நாட்டின் அந்நிய கடன் ஓராண்டில் 10.1% அதிகரித்துள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டின் அந்நிய கடனில் அரசு வாங்கியுள்ள கடனை விட நிறுவனங்களே அதிக கடன் வாங்கி உள்ளன. 2024 மார்ச்சில் ரூ.40.82 லட்சம் கோடியாக இருந்த நிறுவனங்கள் கடன் 2025ல் ரூ.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement