தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிலவின் தென் துருவத்தில் முதல் நாடாக இந்தியா, விக்ரம் லேண்டரை தரையிறக்கி சாதனை படைத்த நாள் இன்று!

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிலவின் தென் துருவத்தில் இந்தியா, முதல் நாடாக விக்ரம் லேண்டரை தரையிறக்கி இன்று சாதனை படைத்த நாள் ஆகும். இஸ்ரோவால் கடந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி நிலவுக்கு சந்திரயான் -3 விண்கலத்தை அனுப்பியது. பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவின் தென்துருவத்தை அடைய இந்த விண்கலம் 40 நாட்கள் எடுத்துக்கொண்டது.
Advertisement

தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக மென்மையான முறையில் தரை இறங்கியது. இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையிடத்திற்கு பிரதமர் மோடி நேரடியாக சென்று விஞ்ஞானிகளை பாராட்டியதுடன், நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர், இறங்கிய இடத்தை 'சிவசக்தி முனை' என்று அழைக்கவும், இந்த தினத்தை தேசிய விண்வெளி தினமாக கொண்டாடவும் உத்தரவிட்டார்.

இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் மிக முக்கியமான மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தேசிய விண்வெளி தினத்தின் முதல் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று டெல்லியில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், பிரக்யான் ரோவர் நிலவில் தங்கியிருந்து 14 நாட்கள் ஆய்வு செய்த விவரங்களை இஸ்ரோ இந்த விழாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

 

Advertisement

Related News