தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியா போன்ற நாட்டில் ஆங்கிலம் தான் பொதுமொழி: நடிகர் கமல் ஹாசன்!

சென்னை: ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் வெப் தொடர்கள் பற்றிய புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஜியோஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியை துணை முதல்வர் உதயநிதி  ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் , நடிகர் கமல்ஹாசன் இருவரும் துவக்கி வைத்து பேசினர்.

Advertisement

இந்த நிகழ்வில் விஜய் சேதுபதி, மோகன்லால், நாகர்ஜூனா உள்ளிட்ட தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், படைப்பாளிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் தமிழில் வெளியாகவுள்ள முக்கிய படைப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.மேலும் தென்னிந்தியப் பொழுதுபோக்கு துறையில் ஜியோ ஹாட் ஸ்டார் 4000 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.

இந்நிகழ்வில் கமல்ஹாசன் பேசும் பொழுது, இனி படைப்புகளுக்கும் கதைகளுக்கும் முழு மற்றும் மாநிலம் தடையாக இருக்காது. அதேபோல் இந்தியா போன்ற பல மொழிகள் இருக்கும் நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவது தான் சிறந்தது. இனி ஆங்கிலம் தான் பொது மொழியாகவும் இருக்க முடியும். இதன் பின்னணி உண்மை நிச்சயம் மேடையில் இருக்கும் உதயநிதி அவர்களுக்கும் புரியும். தென்னிந்திய திரைத்துறை  அற்புதமான கதைகளுக்கான மையம்.

இதற்கு உதாரணமாக காந்தாரா, பாகுபலி, த்ரிஷ்யம் உள்ளிட்ட படங்களை சொல்லலாம். இனி தென்னிந்தியாவில் எடுக்கப்படும் படங்கள் பிராந்திய படங்களாக இல்லாமல் இந்திய படங்களாக வெளியாகும். அதற்கு இப்படியான டிஜிட்டல் தளங்கள் மிகப்பெரும் ஆதரவாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் " மொழிகளைக் கடந்து கதைகளை உருவாக்க இப்படியான டிஜிட்டல் தளங்கள் மிகப்பெரும் உதவியாக இருக்கும் மற்றும் இனி பிராந்திய படங்கள் இந்திய படங்களாக வெளியாகவும் இம்மாதிரியான முன்னெடுப்புகள் கைகொடுக்கும்" எனவும் தெரிவித்தார்.

Advertisement

Related News