தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய சாதனை.. இந்தியாவில் கிரெடிட் கார்டு புழக்கம்: 5 ஆண்டுகளில் ரூ 2.2 லட்சம் கோடி வரை உயர்வு!!

டெல்லி: இந்தியாவின் நிதித்துறையில் ஒரு புதிய சாதனை. 2025 செப்டம்பர் மாதத்தில் கிரெடிட் கார்டு செலவுகள் ரூ.2.2லட்சம் கோடியை தொட்டுள்ளன. இது கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிகமான அளவாகும். CareEdge Ratings வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியர்களின் கிரெடிட் கார்டு செலவுகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 23% அதிகரித்துள்ளன. செப்டம்பர் 2025ல் மட்டும் மொத்தம் கிரெடிட் கார்டு பயன்பாடு ரூ.2.17 லட்சம் கோடியை எட்டியுள்ளது. 2020க்கு பிறகு இதுவே மிக உயர்ந்த நிலை.

Advertisement

இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் விழா கால சலுகைகள், நுகர்வோரின் அதிகரித்த தேவைகள் மேலும், ஜி.எஸ்.டி. விகிதத்தில் ஏற்பட்ட குறைப்புகள் என நிபுணர்கள் கூறுகின்றனர். வங்கிகள் இந்த காலத்தில் பல சிறப்பு சலுகைகளை வழங்கியதால் கடன் அட்டைகள் மூலமான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. அதிலும் குறிப்பான விஷயம், தனியார் வங்கிகள் தற்போது கிரெடிட் கார்டுசந்தையை 74.2 சதவீத பங்குடன் முன்னிலை வகிக்கின்றன. அதாவது இந்தியாவில் நடக்கும் 4 கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் 3 பரிவர்த்தனைகள் தனியார் வங்கிகளின் வழியாக தான் நடக்கிறது.

நிபுணர்கள் கூறுவதாவது, இந்த வளர்ச்சி இந்தியர்களின் டிஜிட்டல் செலவு பழக்கங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய மிகப்பெரிய மாற்றத்தை காட்டுகிறது. கடன் அட்டைகள் இனி அவசர நிலைகளுக்கு மட்டுமல்லாமல் தினசரி செலவுகளுக்கான முக்கிய கருவியாக மாறிவிட்டன என நிபுணர்கள் கூறுகிறார்கள். மொத்தத்தில் 2025 செப்டம்பர் மாதம் இந்திய நுகர்வோரின் வாங்கும் திறன் வங்கிகளின் சலுகைகள் மற்றும் நிதி ஒழுங்கு முறைமைகளின் நவீன மாற்றங்கள் ஆகியவை ஒன்றாக சேர்ந்து இந்தியாவின் கிரெடிட் கார்டு சந்தைக்கு ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த வளர்ச்சி மேலும் தொடருமா? அல்லது விழாக்காலங்களில் தாக்கம் குறைந்ததும் மீண்டும் சரியுமா? என்பதை பார்க்க வேண்டும்.

Advertisement

Related News