தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் 'Bhairav Battalion' என்ற புதிய படைப்பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிப்பு!!

டெல்லி : இந்திய ராணுவத்தில் புதிய உயரடுக்கு படைப்பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளதாக காலாட்படை இயக்குநர் ஜெனரல் அஜய் குமார் அறிவித்துள்ளார். சீனா, பாகிஸ்தான் உடனான எல்லைப் பகுதிகளில் திடீர் தாக்குதல்கள், ரோந்து பணிகள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த 'Bhairav Battalion' என்ற பெயரில் புதிய படைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் பைரவ் பட்டாலியனின் முதல் படைப்பிரிவு நவம்பர் 1ம் தேதி ராணுவத்தில் இணைகிறது.

Advertisement

அடுத்த 6 மாதங்களில் இதுபோன்ற 25 படைப்பிரிவுகளை உருவாக்கவும், ஒவ்வொரு பிரிவுகளிலும் காலாட்படை, பீரங்கிகள், வான் பாதுகாப்பு அமைப்புகளை கொண்ட 250 வீரர்கள் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லைட் கமாண்டோ பிரிவு சிறப்புப் படைகளுக்கும் காலாட்படை பிரிவுக்கும் இடையே ஒரு இணைப்பாகச் செயல்படும். கனரக ஆயுதங்கள் பொருத்தப்படாததால், அவர்களின் கவனம் வேகமான, துல்லியமான தாக்குதல்களில் இருக்கும். இது எதிரியை ஆச்சரியப்படுத்தும். கண்காணிப்பு, தாக்குதல் நடவடிக்கை இரண்டையும் செய்வதற்கே இராணுவத்தின் ஒவ்வொரு காலாட்படை பட்டாலியனிலும் ஒரு ட்ரோன் படைப்பிரிவு சேர்க்கப்படுகிறது.

Advertisement

Related News