சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
05:30 PM Aug 14, 2025 IST
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்கிறார். சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்கிறார். தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் தேநீர் விருந்து புறக்கணிக்கப்படுகிறது.